states

ஒன்றிய அரசு - தில்லி அரசு மோதல் 5 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, ஜூலை 13-  தில்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. தில்லி யூனியன் பிரதேச அரசாக செயல்பட்ட போதிலும் நாட்டின் தலைநகர் என்பதால் நகரின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய அரசின்  பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது நகரில் பாதுகாப்பு, பேரணி, அனுமதி அளித்தல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசு தன்னிடத்தில் வைத்துள்ளது. இதனால் தில்லி காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. தில்லி நகரின் அதிகாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தில்லி மாநில அரசு கேட்டு வரு கிறது. இதுதொடர்பான வழக்கை தில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில்தொடுத்துள்ளது. இந்த வழக்கு கடந்த மே மாதம் 6-ம் தேதி விசார ணைக்கு வந்தபோது வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து ஆம்  ஆத்மி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாயன்று தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆம் ஆத்மி அரசு தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த  வழக்கறிஞருமான அபிஷேக்மனு சிங்விஆஜரானார்.  அப்போது அவர் வாதிடும்போது, ‘‘இதை மிகவும் அவசரமான வழக்காக கருதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். எனவே உச்ச நீதிமன்றத்தில் இதை பட்டியலிட வேண்டும்’’ என்றார். இதற்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஒப்புக்கொண்டார். முடிவில் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்ட னர். அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்ற விவாதம் எழுந்துள்ளதால் இவ்விவகா ரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வின் அதி காரப்பூர்வமான தீர்ப்புக்காக பரிந்துரைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.