புதுதில்லி, ஜூலை 3- இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா, நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது. நேபாளத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வாகனங்களின் சாவிகளை நேபாள அரசின் கல்வித் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தேவேந்திர பௌட லிடம் ஒப்படைத்தார். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டு கள் நிறைவடைவதையொட்டி, நேபாளத் திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் வழங்கப் பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரி வித்துள்ளது. ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு வழங்கியுள்ளது இரு நாட்டின் உறவினை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். கடந்த ஆண்டு கொரோனா காலத்தின்போது இந்தியா சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட 39 ஆம்புல ன்ஸ்களை நேபாளத்திற்கு வழங்கியது. அதேபோல 2020-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த நாளில் 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளிப் பேருந்துகளை இந்தியா நேபாளத்திற்கு பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.