states

img

சிபிஎம் அசாம் மாநில 23ஆவது மாநாடு

புதுதில்லி, பிப்.27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநில 23ஆவது மாநாடு, சச்சார் மாவட்டத்தில் சில்சாரில், பிப்ரவரி 15-17 தேதிகளில் நடை பெற்றது. சுப்ரகாஷ் தாலுக்தார் புதிய மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், பிருந்தா காரத், நிலோத்பால் பாசு பங்கேற்றனர். மாநாட்டுக் கொடியை முதுபெரும் தோழர் ஹேமன்தாஸ் பிரதிநிதிகளின் எழுச்சி மிகு முழக்கங்களிடையே ஏற்றினார். மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு தோழர் நூருல் ஹூடா பெயரும், அரங்கத்திற்கு தோழர் தீபக் பட்டாச்சார்யா பெயரும் சூட்டப்பட்டிருந்தது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் பேரணி ரத்து செய்யப்பட்டது. தொடக்கவிழா அமர்வில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தொடக்க வுரை நிகழ்த்தினார்.

ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் தொடக்கவிழா அமர்வில் பங்கேற்றனர். மாணிக் சர்க்கார் தன்னுடைய தொடக்கவுரையில் பேசியதாவது: “பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின் ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியக்  குடியரசின் அடித்தளங்களையே அடித்து நொறுக் கும் வேலைகளை இரட்டிப்பாக்கியிருப்பதாகக் கூறினார். மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அம்மாநிலத்தையே கலைத்தது. குடியுரிமைத் தடைச் சட்டத்தை நிறை வேற்றியிருப்பதன் மூலம் பாஜக அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தையே மீறியிருக்கிறது. இப்போது அது முன்மொழிந்திருக்கிற தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பதும் நம் மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளங்கள் மீது மேலும் தாக்குதல் தொடுக்கப்படுவதேயாகும்.   பாஜக மதவெறி அரசுக்கும் கார்ப்பரேட்டு களுக்கும் இடையேயான கள்ளப்பிணைப்பு அதிகரித்திருக்கிறது. பெண்களின் வாழ்நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அனைத்துத்தரப்பு மக்களையும் அணிதிரட்ட வேண்டியது நம்முன் உள்ள கடமையாகும் என்று மாணிக் சர்க்கார் கூறினார்.

பிருந்தா காரத்

அடுத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது: “தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் அனுப வத்தை அசாம் மக்கள் நன்கு அறிவார்கள். 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேசி யக் குடிமக்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள சட்ட  வாய்ப்புகளை அனைத்தையும் பாஜக அரசு  அளிக்க மறுக்கிறது. எந்த அளவுக்கு முடி யுமோ அந்த அளவுக்கு முஸ்லீம்களை பதி வேட்டிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.இவ்வாறு பாஜக மேற்கொண்டுவரும் மக்கள் விரோத, மதவெறி -பாசிஸ்ட் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுதும் மக்களை அணிதிரட்டி வருகிறது என்று பிருந்தா காரத் கூறினார்.   அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு பேசும்போது, ஏப்ரலில் கேரளாவில் கண்ணூரில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு வரவிருக்கும் காலங் களில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை களைத் திட்டமிடும் என்றார்.

மாநில செயலாளரான தீபன் பட்டாச்சார்யா உடல்நலிவுற்றிருப்பதால் அவரால் மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே மத்தியக்குழு உறுப்பினர் சுப்ரகாஷ் தாலுக்தார் செயலர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்மீது ஆறு பெண்கள் உட்பட 61 பிரதிநிதிகள் விவா தங்கள் மேற்கொண்டார்கள். பின்னர் அவர் தொகுப்புரை வழங்கியபின் அறிக்கை நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   மாநாடு 50 உறுப்பினர்கள் கொண்ட புதிய மாநிலக்குழுவைத் தேர்வு செய்தது. முது பெரும் தோழர்கள் ஹேமன் தாஸ், உத்தப் பர்மான் மற்றும் சத்யாபதி புய்யான் சிறப்பு அழைப்பா ளர்களாக இருப்பார்கள். புதிய மாநிலக்குழு சுப்ரகாஷ் தாலுக்தாரை மாநில செயலாள ராகவும்,  14 பேர் கொண்ட மாநில செயற்குழுவை யும் தேர்வு செய்தது. 5 பெண்கள் புதிய மாநி லக்குழுவில் அங்கம் பெறுகிறார்கள். ஒருவர் மாநில செயற்குழுவில் இடம்பெறுகிறார்.  அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக 16 பிரதிநிதி களையும் மாநாடு தேர்வு செய்தது.  (ந.நி.)