states

img

மோடி அரசின் அதிரடி தள்ளுபடி விற்பனை!

வராக்கடன் வசூலிக்க IBC 2016 எனும் சட்டவிதிகளை மோடி அரசாங்கம் உருவாக்கியது. இந்த விதிகளின் கீழ் அனைத்து வராக்கடன் பிரச்சனைகளையும் தீர்த்து விடுவோம் என சவடால் பேசியது மோடி அரசு. கடனை திருப்பி செலுத்தாமல் அதே சமயம் உற்பத்தியையும் நடத்த இயலவில்லை என கை விரித்த நிறுவனங்களின் குழுமத்தில் உள்ள ஏனைய சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை வசூல் செய்திருக்க முடியும்.  ஆனால் நடந்தது என்ன? கீழ்கண்ட ஒரு மாதிரி நிகழ்வு இதனை விளக்கும்: வங்கி:  இந்த x நிறுவனம் நம்மிடம் ரூ.100 கடன் வாங்கியுள்ளது. இந்த கடனை திருப்பி தர இயலவில்லை என கூறுகிறது. எனவே IBC 2016  சட்டவிதிகள் படி இதனை தீர்க்க வேண்டியுள்ளது. x நிறுவனம்:  என்னால் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. வங்கிக்கு  பணம் தரவும் முடியவில்லை. பிரச்சனையை சீக்கிரம் தீர்க்கவும். அப்பொழுது y நிறுவனம் முன்னுக்கு வந்து கூறுகிறது:  x நிறுவனத்தை நான் விலைக்கு வாங்குகிறேன். ஆனால் அதன் கடன் தொகையான ரூ.100ஐ தர மாட்டேன். 20 ரூபாய்தான் தருவேன். 80 ரூபாய் தள்ளுபடி தேவை. வங்கி:  வேறு வழியில்லை. 80 ரூபாய் தள்ளுபடி செய்து 20 ரூபாய் பெற்றுக்கொண்டு வராக்கடனை தீர்த்து விடுவோம். வங்கி இதனை சாதனையாக பெருமையுடன் அறிக்கை பதிவு செய்கிறது. ஆனால் தள்ளுபடி செய்யப்பட்ட 80 ரூபாய் யாருடைய பணம்? அதனை எப்படி ஈடு செய்வது? இந்த விவரங்களை வங்கி மறைத்துவிடுகிறது.  அவ்வாறு அதிரடி தள்ளுபடியில் தாரைவர்க்கப்பட்ட  முதல் 11 விற்பனைகளும் தள்ளுபடியும்!  (தொகை முழுவதும் ரூ.கோடிகளில்)

முதல் 11 நிறுவனங்கள் மட்டும் ரூ. 2.62 லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்பட்டுள்ளன.  இந்த தள்ளுபடி யார் தலையில் விடியும்? பொதுத்துறை வங்கிகள் தலையில்! அதாவது மக்களின் சேமிப்பு பணம். வங்கிகளின் லாபத்தில் இந்த தள்ளுபடி நடப்பதால் சிறு/குறு தொழில்களுக்கு கடன் தருவது பாதிக்கப்படும். மக்களின் சேமிப்பு பாதிக்கப்படும். வராக்கடனை வசூலிப்பதற்கு பதிலாக தள்ளுபடியில் விற்பனை செய்து வங்கிகளின் லாபத்தை பாஜக அரசு சிதைக்கிறது. வங்கிகளை காப்போம்!

- அ.அன்வர் உசேன்