ஜெய்ப்பூர், மார்ச் 10- ராஜஸ்தான் மாநில சட்டப்பேர வையில் புதனன்று காவல் மற்றும் சிறைத்துறைகளுக்கான மானி யக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அவற்றுக்கு பதில ளித்து, சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசி னார். அப்போது, “தங்களது ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம், மத்தி யப் பிரதேசம் மற்றும் ஹரியானா வில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக, பாஜக எம்எல்ஏக் கள் அமளியில் ஈடுபடுகின்றனர்” என்று தெரிவித்த தாரிவால், “பிர தமர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் உத்தரப்பிரதேச பகு தியில் (வாரணாசி) பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பற்ற நிலை தான் உள்ளது. அங்கு புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய் வதுகூட கடினம்” என்றும் குற்றம் சாட்டினார். அமைச்சரின் இந்த கருத்திற்கு எதிராகவும் பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், “பாஜக உறுப் பினர்கள் சகிப்புத்தன்மை இல்லா தவர்கள் என்றும், அவர்களால் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறிய தாரிவால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2020- அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்க ளில் உத்தரப் பிரதேசமே முதலி டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட் டுள்ளார்.