states

img

கேரளத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

கேரளத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என 2 வாரங்களுக்கு முன் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அறிவித்தது போலவே சனிக்கிழமை (மே 24) முதல் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பின் இந்தாண்டு தான் மே கடைசி வாரத்திற்கு முன்பாகவே கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதற்குமுன் 2009 மே 23ஆம் தேதி அங்கு முன்கூட்டியே பருவமழை தொடங்கி இருந்தது. அதே போல 35 ஆண்டுகளுக்கு முன் 1990ஆம் ஆண்டு மே 19 அன்று கேர ளத்தில் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்கியது. இதுதான் கேரள வரலாற்றிலேயே கோடைக்காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட் அலர்ட் எச்சரிக்கை அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு அருகே சனிக்கிழமை அன்று கரை யைக் கடந்தது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் அதீத கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.