ராஜஸ்தானில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜகவின் சன்னிலால் கராசியா, மதன் ரத்தோர் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். செவ்வாயன்று வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற் கான கடைசி நாள் என்ற நிலையில், சோனியா காந்தி உள்ளிட்ட 3 பேரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளரும் போட்டியிடாததால் மூவரும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சட்ட மன்ற செயலாளர் மகாவீர் பிரசாத் சர்மா அறிவித்தார். இதன்மூலம் சோனியா காந்தி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.