சண்டிகர், பிப்.21- பஞ்சாப்பில் ஆட்சியமைப் பதற்கான எண்ணிக்கை குறை வாக இருந்தால், பாஜகவின் ஆதரவைப் பெறுவது குறித்து முடிவு செய்வோம் என்று சிரோ மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் குர்பச்சன் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் 117 உறுப்பினர் களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு ஞாயி றன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்த லில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி இருப் பதாக கூறப்படும் நிலையில், சிரோமணி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டன. சிரோமணி அகாலிதளம் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ளன. இந்நிலையில், குர்தாஸ் பூர் தொகுதியில் போட்டியிட்ட சிரோமணி அகாலிதளம் கட்சி யின் மூத்த தலைவர் குர்பச்சன் சிங் செய்தி நிறுவனம் ஒன் றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “எங்கள் கூட்டணி (சிரோமணி அகாலி தளம் - பகு ஜன் சமாஜ்) வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பஞ்சாபில் சிரோ மணி அகாலி தளம் - பகுஜன் சமாஜ் அடுத்ததாக ஆட்சி அமைக்கும்” என்று கூறியிருப் பதுடன், “ஆட்சியமைப்ப தற்குத் தேவையான எண்ணிக் கையை விட குறைவான உறுப்பினர்கள் கிடைத்தால், பாஜகவின் ஆதரவை பெறு வது குறித்து கட்சி முடிவு செய் யும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது எண்களைப் பொறுத்ததுதான் என்று கூறி யுள்ள குர்பச்சன் சிங், “தங்க ளின் நம்பர் ஒன் எதிரியென் றால், அது காங்கிரஸ் கட்சி தான்” என்றும் அறிவித்துள்ளார். சிரோமணி அகாலிதளம் ஓராண்டுக்கு முன்வரை பாஜக கூட்டணியில்தான் இருந்து வந்தது. ஒன்றிய அமைச்சர வையிலும் இடம்பெற்றிருந் தது. மோடி அரசு, மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்த பின்னணியில், விவசாயிகளின் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பாஜக கூட்டணியிலிருந்து வில கியது. தற்போது அக்கட்சி மீண்டும் பாஜக கூட்டணிக்கு அடிபோட்டுள்ளது.