புதுதில்லி, மே 3- இந்தியாவில் வேலை யின்மை விகிதம், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் அதிகரித் துள்ளதாக இந்தியப் பொருளா தாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வேலை யின்மை சுமார் 1 சதவிகிதம் அதி கரித்துள்ளது. இந்தியாவில் வேலை யின்மை விகிதம், மார்ச் மாதம் 7.60 சதவிகிதமாக இருந்த நிலை யில், ஏப்ரல் மாதத்தில் 7.83 சத விகிதமாக 23 புள்ளிகள் அதிக ரித்துள்ளது. நகர்ப்புறங்களில் மார்ச் மாதம் 8.28 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 9.22 சதவிகிதமாக 96 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 7.29 சதவிகித மாக இருந்த வேலையின்மை விகிதம் 7.18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்ச மாக பாஜக ஆளும் ஹரியானா வில் வேலையின்மை விகிதம் 34.5 சதவிகிதமாகவும், காங்கி ரஸ் ஆளும் ராஜஸ்தானில் 28.8 சதவிகிதமாகவும் உள்ளது. திமுக ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் மார்ச் மாதம் 4.1 சதவிகி தமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரலில் 3.2 சதவிகித மாகக் குறைந்துள்ளது. விலைவாசி உயர்வால் உள் நாட்டுத் தேவை அல்லது நுகர்வு குறைந்துள்ளது. கொரோனா வில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தின் வேகமும் மிக மெதுவாக உள்ளது. இவையே வேலையின்மை அதி கரித்ததற்கான காரணங்கள் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.