states

பெண்கள் திருமண வயதை உயர்த்த எழுபது அமைப்புகள் எதிர்ப்பு

புதுதில்லி, மே 21- பெண்ணின் திருமண வயதை உயர்த்து வதற்குப் பதில் கல்வியின் தரத்தை மேம் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் குழந்தை நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவ தற்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. ஜெயா ஜெட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, ஒன்றிய அமைச்சரவை இந்த ஒப்பு தலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு விகிதம், தாய்-சேய் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியதாகக் கூறி யுள்ளது.

இந்தச் சூழலில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே மாதர் சங்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பல தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பு களை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக  ஒட்டுமொத்த புரிதலைப் பெற தொடங்கி யது. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி மற்றும் 70 சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றத்தின் கன்வீனர் அமோத் கே.காந்த், கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை யைச் சேர்ந்த ரவிகாந்த் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குழு, கல்வி, பெண்கள், குழந்தைகள் தொடர்பான நாடா ளுமன்ற நிலைக்குழுவில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், “குழந்தைத் திரு மணச் சட்டம்- 2005, குழந்தைத் திரும ணங்களை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டது என்பது தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. இவற்றை  தவிர்க்க கல்வி யின் தரத்தை நாம் அதிகரிக்க வேண்டும். பள்ளி இடை நிற்றலை தீவிரமாகக் கண்காணித்து பெண்களுக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை அளிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும்போது இளம் வயதினர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக பெற்றோருக்கு எதிராக திருமணம் செய்து கொள்ப வர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இத னால், அவர்கள் குற்றவாளிகளாக்கப் படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

முன்னதாக, நாட்டின் பொதுத் தேர்தல்க ளில் வாக்களிக்க 18 வயது போதும் என்றால் திருமணம் ஏன் கூடாது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் குழந்தை நல அமைப்புகள் பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் புதிய சட்டத்திற்கு எதிராக இந்த அறிக் கையை தாக்கல் செய்துள்ளன. கடந்த ஆண்டு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து எதிர்க் கட்சிகள் கவலை தெரிவித்ததையடுத்து, முன்மொழியப்பட்ட சட்டத்தை முழுமை யாக ஆய்வு செய்யக் கோரியதைத் தொடர்ந்து, குழந்தைத் திருமணத் தடுப்பு மசோதா, 2021 நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது. நாடாளுமன்ற நிலைக் குழுவைச் சந்தித்த மற்ற என்ஜிஓக்களில் தில்லியை தளமாகக் கொண்ட குழந்தை உரிமைக ளுக்கான மையம்  இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  எங்களது அமைப்பு  104 பிற அமைப்புகளுடன் சேர்ந்து நடத்திய ஆய்வின்படி 2009 கல்வி உரிமைச் சட்டத்தின் படி இலவசக் கல்வியை, 14 முதல் 18 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது ஆகியவை இந்த மசோதாவின் நோக்கமாக இருப்ப தால், வறுமை  சுகாதாரச் சேவை, கல்வி யின்மை போன்ற அடிப்படை பிரச்சனை களை தீர்ப்பதும் மேம்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.