states

img

ஆளுநர் மாளிகை அருகே போராடிய பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் - மணிப்பூரில் மீண்டும் வன்முறை - பதற்றம்

ஆளுநர் மாளிகை அருகே போராடிய பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் - மணிப்பூரில் மீண்டும் வன்முறை - பதற்றம்

10 பேர் படுகாயம் ; மாநிலம் முழுவதும் போராட்டம் மூளும் அபாயம்

பாஜகவின் இழிவான அரசியல் செயல் பாடுகளால் வடகிழக்கு மாநிலங் களில் ஒன்றான மணிப்பூர் 2 வரு டங்களாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. பாஜக ஆட்சி யை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தினாலும், இன்னும் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறையவில்லை. கிட்டத்தட்ட வன்முறை பூமியாக மாறிவிட்டது. போராட்டம் இந்நிலையில், மே 19 அன்று  மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நடைபெற்ற “ஷிருய்” சுற்றுலா விழாவில் செய்தி சேகரிக்க அரசுப் பேருந்தில் பத்திரிகையாளர்கள் பயணம் மேற்கொண்டனர். பேருந்து உக்ருல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மத்திய பாதுகாப்புப் படையினர் (எந்த பிரிவு என்று உறுதியாக தெரிய வில்லை) அரசு பேருந்தின் பெய ரில் மணிப்பூரை (Manipur State Road Transport Corporation) நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மணிப்பூர் அரசு பேருந்தில், மணிப்பூர் என்று தானே இருக்க வேண்டும் என பத்திரிகையாளர் கள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கேள்வி எழுப்பினர். ஆனால் பாது காப்புப் படையினர், “நாங்கள் கூறு வதை நீங்கள் கேட்டு தான் ஆக வேண்டும்?” என பாதுகாப்புப் படையிடம் கூறியுள்ளனர்.  அதன்பிறகு இந்த சம்பவம் மணிப்பூர் முழுவதும் காட்டுத்தீ யாக பரவ வெள்ளிக்கிழமை முதல் மணிப்பூர் முழுவதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் போது “சொந்த மாநில அரசு பேருந்தி லேயே மணிப்பூர் பெயர் இருக்கக் கூடாது என்று கூறச் சொன்னது யார்?” என பொதுமக்கள் முழக்கங் களை எழுப்பினர்.  ஆளுநர் மாளிகை முற்றுகை பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கை குறித்து விசா ரிக்க 2 பேர் கொண்ட விசாரணை குழுவை மணிப்பூர் அரசு அமைத் தது. ஆனால் இதை ஏற்க மறுத்த மணிப்பூர் ஒருமைப்பாடு ஒருங்கி ணைப்புக் குழு (சிஓசிஓஎம்ஐ - COCOMI), “ஆளுநர், மணிப்பூர் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும்  பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய பெரும் போராட்டத்தை நடத்துவோம்” என  எச்சரிக்கை விடுத்தது.  இந்த எச்சரிக்கையை ஆளுநர் கண்டுகொள்ளாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடை பெற்றது. இந்த அவமதிப்புக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளுநர் மாளி கையை முற்றுகையிட பொதுமக் கள் 500 மீட்டர் தூரம் அணி வகுத்துச் சென்றனர். ஆளுநர் மாளிகையில் இருந்து  150 மீட்டர் தொலைவில் உள்ள காங்லா கேட் அருகே கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி னர். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என தகவல் வெளி யாகியுள்ளன. ஆனால் இது உண்மையான எண்ணிக்கை இல்லை என மணிப்பூர் ஒருமைப் பாடு ஒருங்கிணைப்புக் குழு கூறி யதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. போராட்டம் தொடரும் : சிஓசிஓஎம்ஐ இந்த சம்பவம் தொடர்பாக சிஓ சிஓஎம்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் நிர்வாகத் தோல்விகளை மறைக் கவே ஜனாதிபதி ஆட்சியின் கீழ் அதிகப்படியான பலத்தைப் பயன் படுத்தி வருகின்றனர். இதனால் ஆளுநர், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மாநில பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவி விலக வேண்டும்” என கூறப்பட்டு ள்ளது. மேலும் ஆளுநர், தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் மாநில பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகும் வரை  போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என  சிஓசிஓஎம்ஐ அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பெண்கள் மீதும் தாக்குதல்

ஆளுநர் மாளிகைக்கு அருகே போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆனால் பாதுகாப்புப் படையினர் பெண்கள் என்று கூட பாராமல், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.