states

5 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 75 சதவிகிதம் பேர் உயர்சாதியினர்!

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தகவல்

புதுதில்லி, ஜூலை 23 - இந்தியாவில் கடந்த 5 ஆண்டு களில் 604 பேர் உயர் நீதிமன்ற நீதிபதி களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,  இவர்களில் 75 சதவிகிதம் பேர் உயர்சாதி யினர் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் காலத்தில் நீதிபதி களாக நியமனம் செய்யப்பட்டவர் களில் எஸ்சி-எஸ்டி எனப்படும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடி யினர் 5 சதவிகிதத்துக்கும் குறைவு என்ப தையும் மேக்வால் ஒப்புக் கொண்டுள் ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்  தொடர் நடைபெற்று வரும், மஜ்லிஸ்  கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, “கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 79 சதவீதம் பேர் உயர்சா தியை சேர்ந்தவர்கள் என்பது உண்மை யா?’’ என கேள்வி எழுப்பி இருந்தார்.  இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்  2023 ஜூலை 17 வரை உயர் நீதிமன்றங் களில் மொத்தம் 604 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 458 பேர் (75.58 சதவிகிதம்) பொது (உயர்சாதி எனக் கூறப்படும்) பிரிவைச்  சேர்ந்தவர்களாக உள்ளனர். 18 பேர் (2.98 சதவிகிதம்) பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும், 9 பேர் (1.49 சத விகிதம்) பட்டியல் பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதர பிற்ப டுத்தப்பட்டோர் 72 பேர் (11.92 சதவிகி தம்). 32 பேர் (5.6 சதவிகிதம்) சிறு பான்மையினர்’’ என தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளின் நியமனமானது, சாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டிற்குள் வராத, அரசியலமைப்பு பிரிவு 124, 217 மற்றும் 224 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும், எனினும், நீதிபதிகள் நியமனத்தில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளார்.