states

img

பாஜகவுக்கு வாக்களித்தோரையும் விலைவாசி உயர்வு பாதிக்கிறது!

பாட்னா, ஏப்.6- இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.  16 நாட்களில் 14 முறை பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை உய ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி யும், உலகின் பிற நாடுகள் உயர்த்தியதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே நம் நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் கே.சி. தியாகி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில், “பெட்ரோல், டீசல் மற்றும் சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசாங்கம் உடனடி யாக நிறுத்த வேண்டும். மேலும், உயர்த் தப்பட்ட விலைகளை திரும்பப் பெறுவது மிகவும் முக்கியம்.  ஏனெனில் இது பணவீக்கத்தில் மோச மான விளைவுகளை ஏற்படுத்தும். அதிக ரித்து வரும் பணவீக்கம், தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆர்வத்துடன் வெற்றி பெறச் செய்த வாக்காளரையும் பாதிக்கிறது” என்று தியாகி குறிப்பிட்டுள்ளார்.