states

img

ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் பெயரில் கலவரம்

புதுதில்லி, ஏப்.18- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒருவாரமாக ராம நவமி, அனு மன் ஜெயந்தி ஊர்வலம் என்ற பெயரில் சங்-பரிவாரங்கள் இஸ்லாமியர் பகுதி யில் புகுந்து திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றி வருகின்றனர். மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கோவா, ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்ப வங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்ததுடன், 2 பேர் பலியாகி னர். முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டன. பொருட்கள் சூறையாடப் பட்டன.  இந்நிலையில், இந்த வன்முறை யானது தற்போது தில்லி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்  தில் ஆலூர் ஹொளகுண்டா, இரலகட்டா  ஆகிய இடங்களில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்து, 5 பேர் படுகாயம் அடைந்துள்ள னர். 15 பேருக்கு லேசான காயம் ஏற் பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பக வான்பூர் கிராமத்திலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையில் முடிந்தது. தில்லி ஜகாங்கீர்புரி பகுதியில் நடை பெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலம் மற்றும் மோதலில் 8 போலீசார் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். தில்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோதிலால் மீனா என்பவரின் கையில் குண்டுபாய்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தில்லியில் அனுமன் யாத்திரையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் பயங்கர ஆயுதங்களோடு பேரணியாக சென்று கலவரத்தில் ஈடு பட்டதும், போலீசாரை வன்முறைக் கும்பல் துப்பாக்கியால் சுட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.  தற்போது, தில்லி வன்முறை தொடர்  பாக ஜாகித், முகம்மது அன்சார், சஜ்ஜத், முக்தியார் அலி, முகம்மது அலி, ஆமிர், அக்ஷார், நூர் ஆலம், முகம்மது ஆலம், ஜாகிர், அக்ரம், இம்தியாஸ், ஆஹிர் மற்றும் மற்றொரு முகம்மது அலி உள்பட, இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். அவர்கள் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட் டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது சமூக வலைதளங்களில் மெக்கா மசூதி யில் காவிக்கொடி பறக்கும் வகையில் கிராபிக்ஸ் செய்த சர்ச்சைக்குரிய வீடியோ வை பதிவிட்டிருந்தார். இதன்மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அங்கு வந்த கும்பல் கல்வீச்சு தாக்குதலில் ஈடு பட்டது. இதில், காவல்துறை வாகனங்கள் தேசம் அடைந்ததுடன், இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்தது. மொத்தம் 12 போலீ சார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்ப வம் தொடர்பாக 40 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.