புதுதில்லி, மார்ச் 17- ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு பாஜக தலைவர்கள் அத் தனை பேரும் கண்ணீருடன் வெளியே வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகத் துவங்கி யுள்ளன. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல் லவி ஜோஷி, பாஜக ஆதரவு நடி கரான அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. 80-களின் பிற்பகுதி யிலும் 90-களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப் பட்ட சம்பவங்களை மையமாக வைத்து, இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்க ளுக்கு எதிரான வெறுப்பை விதைக் கும் வகையில் இப்படம் எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில்தான், இந்த திரைப் படத்தை பார்த்து பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் வடித்தபடியே தியேட்டரை விட்டு வெளியே வருவ தாக சமூகவலைதளங்களில் புகைப் படங்கள் வெளிவரத் துவங்கியிருக் கின்றன.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இந்த படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட தாக வீடியோவே வெளியாகியுள் ளது. இந்த வீடியோவை சமூகவலை தளங்களில் பகிர்ந்தவர்கள் ‘‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை விவரிக்கும் ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப் படத்தைப் பார்த்து, மூத்த பாஜக தலை வர் எல்.கே. அத்வானி அழுதார்’’ என இந்தி வாசங்களுடன் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில், அத்வானி ஒரு தியேட்டரில் அமர்ந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு இருக்க, பின்னணி யில் கேசரி படத்தின் தெறி மிட்டி பாடல் ஒலிக்கிறது. உண்மையில், அத்வானி பார்ப்ப தாக காட்டப்படும் வீடியோ சமீபத்தி யது அல்ல, 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் காஷ்மீரி பண்டிட்ஸ்’ திரைப் படம் சிறப்புத் திரையிடலில் அத் வானி கலந்துகொண்டபோது எடுத் தது என்பதும் அம்பலமாகி உள்ளது.
பிரதமர் மோடியும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டார் என்றும் புகைப்படங்கள் பரப்பி, புரட்டி வேலைகளை அரங் கேற்றி வருகின்றனர். இதில், ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து அழு தேன் என்று நேரடி வாக்குமூலம் அளித் துள்ளார். “காஷ்மீரில் இருந்து இந்துக் கள் வெளியேற்றப்பட்ட காட்சியைப் பார்த்து அழுதேன். தி காஷ்மீர் பைல்ஸ் படம் வெளி வராமல் இருந்திருந்தால், மக்கள் உண்மையை அறிந்திருக்க மாட்டார்கள். நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் இந்த படம் திரையிடப்பட வேண்டும்” என்றும் உருக்கம் காட்டியுள்ளார்.