states

img

உ.பி. தேர்தல் அரசியலமைப்பைக் காப்பதற்கான போராட்டம்

லக்னோ, பிப்.7- “உத்தரப் பிரதேசத்தில் நடப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்” என்றும், “இந்த தேர்தலில் 400 இடங்கள் வரை தங்களுக்கு கிடைக்கும்” என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். உ.பி. தேர்தலையொட்டி அகிலேஷ் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரு கிறார். அதனொரு பகுதியாக மதுரா, ஆக்ரா, அலிகார் நகரங்களில் நடந்த கூட்டங்களில் அவர் பேசியிருப்பதாவது: “உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர் தலில் சமாஜ்வாதி கட்சி சக்திவாய்ந்த போட்டியாளராக உருவெடுத்துள்ளது. இதனால் சமாஜ்வாதிக்கு எதிராக வாக்க ளிக்குமாறு பொதுமக்களுக்கு தொலை பேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது.  இந்தத் தேர்தல் உத்தரப் பிர தேசத்தின் எதிர்காலத்துக்காகவும், நாட்டின் அரசியலமைப்பை காக்கவும் நடைபெறும் தேர்தல். மக்கள் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சி மீதுள்ள மக்களின் கோபத்தை பார்க்கும்போது, கூட்டணி (சமாஜ்வாதி -ஆர்எல்டி) 400 இடங்களை பெறப்போகிறது. மீதமுள்ள 3 இடங்களை எதிர்க்கட்சி பெறும். உத்தரப் பிரதேச தேர்தலில் ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி)தலைவர் ஜெயந்த் சவுத்ரி என்னுடன் கூட்டணி வைத்த பிறகு, பாஜகவினரின் வலி அதிகரித்துள்ளது.  பாபா (ஆதித்யநாத்) ஒரு அற்புதமான முதல்வர், பொய்களை பரப்புவதை தவிர அவருக்கு எந்த வேலையும் இல்லை. பாஜக அரசால் இளைஞர்களின் எதிர் காலம் பாழாகி விட்டது. அரசு வேலை கொடுக்க முடியாமல் இளைஞர்களின் வயது அதிகரித்து வருகிறது. ஆனால் எங்கள் ஆட்சி அமைந்தால் வயது வரம்பில் தளர்வு அளிக்கும் வேலையை செய்வோம்.  தொற்றுநோய் காலத்தில் விவசாயி கள் அச்சமின்றி உழைக்காவிட்டால் நாடு உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை சந்தித்திருக்கும். ஆனால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறும் பாஜக அரசால் அவர்களுக்கு உரம்கூட வழங்க முடியவில்லை. சமாஜ் வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒன்றிய அர சின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவோம். இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.