2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். மேலும் தாமிர பட்டயம் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.
77 வயதாகும் அம்பை சிறந்த பெண் எழுத்தாளர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற நூல் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட நூல்களையும் அம்பை எழுதியுள்ளார்.
அதனையடுத்து “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.