கொல்கத்தா, ஏப்.12- எரிபொருள்களின் விலை உயா்கிறது என்று புலம்புவ தற்குப் பதிலாக, பெட்ரோல், டீசல், எரிவாயு பயன்பாட்டை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான ஜக தீப் தன்கர் கூறியுள்ளார். மோடி அரசு, கடந்த 2 வாரத் தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை 14 முறை உயர்த்திய தால், பெட்ரோல் விலை 120 ரூபாயையும், டீசல் விலை 110 ரூபாயையும் தொட்டுள்ளது. இதையொட்டி பிற அத்தியாவ சியப் பொருட்களின் விலைவாசி யும் உயர்ந்துள்ளது. எனவே, பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில்தான், இந்தி யன் ஆயில் கார்ப்பரேசன் (ஐஓசி) மற்றும் எரிபொருள் விநி யோக நிறுவனங்கள் சார்பில் கொல்கத்தாவில் திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் பேசியுள்ளார். அப்போது, ‘‘பெட்ரோலியப் பொருள்களை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. அதன் காரணமாக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அவற் றின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதே சிறந்த மாற்று வழியாகும். பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது நாட்டின் பொரு ளாதாரத்துக்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் பலனுடைய தாக இருக்கும். பெட்ரோலியப் பொருள்கள் புதுப்பிக்க இய லாத ஆற்றல் மூலங்களாக உள் ளன. அவை உற்பத்தியாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே, அவற்றின் பயன்பாட்டைத்தான் மக்கள் குறைத்துக் கொள்ள வேண் டும்’’ என்று கூறியுள்ளார்.