ஒடிசாவில் வேகமாக பரவும் “காலரா” தொற்று
11 பேர் பலி ; பலர் கவலைக்கிடம்
பாஜக ஆளும் ஒடிசா மாநி லத்தின் ஜாஜ்பூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் காலரா தொற்று வேகமாகப் பரவி வரு கின்றது. புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் காலரா தொற்றுக்கு 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலராவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விடுமுறை, பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து
காலரா தொற்று வேகமாக பரவி வருவதால் ஜாஜ்பூர் மாவட்டத்தில் “ராஜா பண்டிகை” விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே கொண்டாட் டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய் யப்பட்டுள்ளன. அவசரகாலத்தில் அனைத்து ஊழியர்களும் பணியில் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ஜாஜ்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித் துள்ளார்.