தில்லி, ஜூலை 26- ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தில்லியில் பேரணி சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கைதுசெய்யப்பட்டார். வேலையில்லாத் திண்டாட்டம், பண வீக்கம் அதிகரிப்பு,விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக்கண்டித்து நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாகச் சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த காங்கிரஸ் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.