states

தேசியவாத காங்கிரஸ் தலைவர் மகேஷ் தபாசே கேள்வி அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் விடுதிக் கட்டணங்களை செலுத்துவது யார்?

மும்பை, ஜூன் 25 - “அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏ-க்களின் விடுதிக் கட்டணங்களை செலுத்துவது யார்?” என தேசியவாத காங்  கிரஸ் கட்சியின் (NCP) தலைமை செய்தித்  தொடர்பாளர் மகேஷ் தபாசே கேள்வி யெழுப்பியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமைக்கு எதிராக அவரது சொந்தக் கட்சி எம்எல்ஏ-க்களே போர்க்கொடி தூக்கி யுள்ளனர். மூத்த தலைவரும், மகாராஷ்டிர நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணிதிரண்  டுள்ள அவர்கள், தற்போது அசாம் மாநிலம் ரேடிசன் புளூ ஹோட்டலில் (Radisson Blu Hotel) தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலில் அதிருப்தி சிவ சேனா எம்எல்ஏ-க்களுக்காக மொத்தம் 70 அறைகள் ‘புக்’ செய்யப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு நாளொன்றுக்கு ரூ. 8 லட்சம்  விகிதம் 7 நாட்களுக்கு மொத்தம் ரூ. 56 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனி அறையின் ஒருநாள் வாடகை 11 ஆயிரத்து 500 ரூபாய் என்று கூறப்படுகிறது.

இதுதவிர எம்எல்ஏ-க்களின் உணவுச்  செலவு, நீச்சல் குளம், ஸ்பா பயன்பாடு  போன்றவற்றுக்காகவும் தனியாக நாளொன் றுக்கு 8 லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐஏஎன்எஸ்  (IANS) எனப்படும், இந்திய - ஆசிய செய்திச் சேவை நிறுவனம் ஆதா ரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கான செலவு மற்றும் விடுதிக் கட்ட ணங்களை செலுத்துவது யார்? என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபாசே கேள்வி எழுப்பியுள்ளார். “சூரத்திலும், கவுகாத்தியிலும் விடுதிக் கட்டணங்களைச் செலுத்துவது யார்? தனி  விமானங்களுக்கான செலவை ஏற்பது யார்? குதிரைப் பேரத்திற்கான விலை ரூ. 50 கோடி என்பது உண்மைதானா? இப்போது அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் உண்மையிலேயே செயல்படத் தொடங்கினால், கறுப்புப் பணத்திற்கான மூலதனம் வெளிப்பட்டுவிடும்” என்று மகேஷ் தபாசே குறிப்பிட்டுள்ளார்.