states

img

பிரதமரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கும் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு!

சண்டிகர், பிப்.9- பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்ட மாக நடைபெறுகிறது. மார்ச் 10 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் அம்ரீந்தர் சிங்கின் ‘பஞ்சாப் லோக் காங்கி ரஸ் கட்சி மற்றும் சிரோமணி  அகாலி தளம் (சன்யுக்த்) ஆகிய வற்றுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.  இதையொட்டி பிரதமர் நரேந் திர மோடி, பிப்ரவரி 9,10 ஆகிய இரண்டு நாட்கள், பஞ்சாப் மக்க ளிடம் டிஜிட்டல் முறையில் பிரச் சாரம் செய்வார் என்று அறிவிக் கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந் திர மோடியின் தேர்தல் பிரச்சா ரத்திற்கு எதிராக, பஞ்சாப் விவ சாயிகள் ‘கோ பேக் மோடி’  முழக்கத்தை, சமூகவலைதளங் களில் டிரண்ட் ஆக்கி, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். “தில்லிக்கு வந்த விவசாயி களின் டிராக்டர்களை, சாலை களில் ஆணியடித்து வரவேற்ற பிரதமர் மோடியை, பஞ்சாப் நிச்ச யமாக வரவேற்காது” என கூறி யுள்ள விவசாயிகள் சங்கங்கள், “மோடி பிரச்சாரம் மேற்கொள் ளம் இரண்டு நாட்களும் ‘கோ பேக் மோடி’ முழக்கம் தொட ரும்” என்றும் அறிவித்துள்ளன.

 “வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து 700 விவசாயி களின் உயிர்களைக் காவு வாங்கி யதற்காக பிரதமர் மோடி மன் னிப்பு கேட்கும்வரையும், வேளாண் விளைபொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும்  வரையிலும் தங்களின் போராட் டம் தொடரும்” என்று கூறியுள்ள விவசாயிகள், 700 பேரின் உயிர்த் தியாகம் பற்றி, இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமர் மோடி, நிச்சயமாக காலி சேர் களைப் பார்த்துத்தான் பேசப் போகிறார்... அவருக்கு பஞ்சாப் மக்களின் வாக்குகள் கிடைக் காது..

பாஜக தோற்கடிக்கப்படு வது உறுதி” என்றும் குறிப் பிட்டுள்ளனர். பிரதமர் மோடி கடந்த ஜன வரி 5 அன்று பஞ்சாப் மாநிலத் தின் பெரோஸ்பூரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்ப தற்காகவும், பாஜக பொதுக்கூட் டத்தில் பங்கேற்பதற்காகவும் சென்றார். அப்போது விவசாயி கள் போராட்டம் நடத்திய போராட் டத்தால், பயணத்தையே ரத்து செய்துவிட்டு திரும்பினார்.  தற்போது, மோடி டிஜிட்டல் முறை யில் பிரச்சாரம் மேற்கொள்வ தற்கும் பஞ்சாப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.