கொழும்பு, ஏப்.1- இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்தும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதா ரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசையில் காத்திருந்தும் கிடைக்காத நிலையே உள்ளது. விலைவாசி உயர்வு, எரி பொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின் வெட்டு ஆகியவற்றால் நிலைகுலைந்து போயி ருக்கிறார்கள் இலங்கை மக்கள். இதனால் ஆவேசமடைந்த அந்நாட்டு மக்கள் மார்ச் 31 அன்று இரவு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இல்லத்தை முற்றுகையிட்டு நீண்ட நேரம் போராட் டத்தில் ஈடுபட்டனர்.