states

img

விற்பதற்கென தனி அமைப்பையே உருவாக்கியது பொதுத்துறை நிறுவன நிலங்களும் மோடி அரசிடம் தப்பவில்லை!

புதுதில்லி, மார்ச் 10- பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங் களை விற்பதற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அரசின் அமைச்சரவைக் குழு கூட்டம் முடிவு செய்துள் ளது. இதற்கென ‘தேசிய நிலம் பணமாக்கும் கழகம்’ என்ற அமைப்பையும் மோடி அரசு ஏற்படுத்த உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதனன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்முடிவில், கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், கணிசமான உபரி சொத்துகளை வைத்துள்ளன. பயன்பாடு இல்லாமலும், குறை வான பயன்பாடு கொண்ட நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் அவை உள்ளன.  அவற்றில் ஏற்கெனவே விற்பனை (தனியார்மயம்) செய்யப் பட்டு வரும் அல்லது மூடும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறு வனங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான உபரி நிலங்களையும், கட்டிடங்களையும் பணமாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நிலம் பண மாக்கும் கழகம் (National Land Monetization Corporation - NLMC) உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘தேசிய நிலம் பணமாக்கும் கழகம்’, முற்றிலும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக செயல்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பங்கு மூலதனமாக ரூ. 5 ஆயிரம் கோடியுடனும், செலுத்தப்பட்ட பங்கு மூலதனமாக ரூ. 150 கோடியுடனும் இந்த நிறுவனம் உருவாக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,  அவற்றை பணமாக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொள் ளும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.