states

img

மாண்டியாவில் பள்ளிக்குள் புகுந்து பகிரங்க மிரட்டல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்துத்துவா கும்பல்!

மாண்டியா, டிச.25- கர்நாடகத்தில் மதச் சிறு பான்மையினருக்கு எதிரான தாக்கு தல் சம்பவங்கள் தீவிரமாகியுள் ளன. கர்நாடக பாஜக அரசே, சிறு பான்மையினருக்கு எதிராக மத மாற்றத் தடைச் சட்ட மசோதாவைக் கொண்டுவந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், ஊக்கம் பெற்ற இந்துத்துவா கும்ப லைச் சேர்ந்தவர்கள், தேவாலயங் கள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, சிக்கபல்லபூர் மாவட்டத்தில் உள்ள 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த  புனித ஜோசப் தேவால யத்தில் உள்ள புனித அந்தோணியார் சிலை யைத் தாக்கி சேதப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் உள்ள நிர்மலா உயர்நிலைப்பள்ளி என்ற கிறிஸ் தவ கான்வென்ட் மீதும் தாக்கு தலை அரங்கேற்றியுள்ளனர். இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட் டம் நடைபெற்ற நிலையில் அதனை அராஜகமான முறையில் தடுத்தி நிறுத்தியுள்ளனர். நிர்மலா கான்வென்டிற்குள் நுழைந்த ஹிந்து ஜாக்ரான் வேதிகே என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள், தலைமை ஆசிரியை கனிகா பிரான்சிஸ் மேரி உள்ளிட்ட ஆசிரியர்கள், கன்னியாஸ்திரிகளை மோச மாக பேசியதுடன், இயேசுவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, சரஸ்வதி தேவியின் புகைப் படத்தை மாட்டி வைப்போம் என் றும் இனிவரும் காங்களில் பள்ளி வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக் கள் தற்போது சமூகவலைதளங் களிலும் வெளியாகியுள்ளன.