states

img

‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் கைதை கண்டித்து போராட்டம்

சென்னை, அக். 7 - ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள் ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சனிக்கிழமையன்று (அக்.7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று கூறி ‘நியூஸ் கிளிக்’ முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கா யஸ்தா, மனிதவள பிரிவின் தலைவர்  அமித் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்துள்ளது. எப்ஐஆர் பதிவு  செய்து 24 மணி நேரத்திற்கும் மேல் பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோருக்கு அதன் நகலை வழங்கவில்லை. கருத்து மற்றும் ஊடக சுதந்திரத் தின் மீதான இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் பெண் பத்திரி கையாளர்கள் அமைப்பு (நெட்வொர்க்  ஆப் உமன்ஸ் இன் மீடியா - இந்தியா,  சென்னை கிளை) சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தில் பேசிய பத்திரிகையாளர்கள், “அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. பத்திரிகையாளர்கள் மீது  நடத்திய ஒரு தாக்குதலில் கூட ஆட்சி யாளர்கள் வெற்றி பெற்றது இல்லை. இருப்பினும், கருத்துரிமைக்காக பத்திரிகையாளர்கள் கொடுத்துள்ள விலை அதிகம் இல்லை. உபா ஒரு கருப்புச்சட்டம். அரசு  குற்றம் சாட்டினால், குற்றம்சாட்டப் பட்டவர் தான் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும். இந்த சட்டத்தையே கைவிட வேண்டும். மிகப்பெரிய ஊடகங்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப தயங்குகின்றன. 7-8 வருடங்களாக ஊடக சுதந்திரம் என்பதே இல்லை. கருத்துசுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்தி ரத்திற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யும் பாரம்பரியம் கொண்டது இந்திய ஊடகம். இந்தப்பிரச்சனை யில் நீதிமன்றம் நீதிவழங்கும் என்று நம்புகிறோம். இத்தகைய அடக்குமுறைகளை பொதுச்சமூகம் ஓரிரு நாட்களில் மறந்துவிடும் என்ற ஒன்றிய அரசின் கனவு நிறைவேறாது. ஒன்றிய அரசு  வழக்கை திரும்பப்பெற்று பத்திரிகை யாளர்களை விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகை யாளர்கள் பிரண்ட்லைன் ஆசிரியர்  வைஷ்ணாராய், மூத்த பத்திரிகை யாளர்கள் குணசேகரன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், சுரேஷ்நம்பத், கவிதாமுரளிதரன், ரம்யா, இந்துஜா, பாரதிதமிழன், ஆசிப், செல்வராஜ் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பேரா.கல்பனா உள்ளிட்டோர் பேசினர்.