இந்து மகா சபை தலைவர் சொல்கிறார்
போபால், ஜன.31- மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்டதன் 74-ஆவது ஆண்டு நினைவு தினம், ஞாயிறன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட அதே நேரத்தில், இந்து மகா சபை யினர், காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு அஞ்ச லிக் கூட்டம் நடத்தியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. காந்தி யை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் கொலை வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட நாரா யண் ஆப்தே ஆகியோரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இந்து மகா சபையினர், பாகிஸ் தானை இந்தியாவோடு இணைப்போம் என்று உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டுள் ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூ ரில் காந்தியை இழிவுபடுத்தி பேசியதற்காக, கடந்த டிசம்ப ரில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சாமி யார் காளிசரண் மகராஜ் மற்றும் மகா சபையின் 4 தலைவர் களுக்கு ‘கோட்சே - ஆப்தே பாரத ரத்னா’ விருது வழங்குவ தாகவும் அறிவித்துள்ளனர். மேலும், நிகழ்ச்சி குறித்து பேட்டியளித்த இந்து மகாசபை யின் தேசிய துணைத் தலை வர் ஜெய்வீர் பரத்வாஜ், “‘சுதந்திரப் போராட்டத்தில் இந்து மகாசபை பெரும் பங்க ளிப்பை தந்துள்ளது. காந்தி யால் சுதந்திரம் கிடைத்ததாக மக்கள் தவறாக நம்பக் கூடாது. பிராமணர்கள் செய்த தியாகம் மற்றும் சுதந்திரப் போராட்டத் தின் போது உயிரிழந்த ஏழு லட்சம் பேர் பற்றி காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் மக்க ளுக்கு தெரிவிக்கவில்லை” என் றும் வருத்தப்பட்டுள்ளார்.