states

img

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை

புதுதில்லி, டிச.13-  தனியார் மின் உற்பத்தி நிறு வனங்கள், தாங்கள் உற்பத்தி செய்தி டும் மின்சாரத்திற்கு அதிகக் கட்ட ணம் வசூலிக்கிறதா என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்க ளவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் கேட்டிருந்த கேள்விக்கு, ஒன்றிய மின்துறை அமைச்சர், தனி யார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணம் பெற அனு மதி இல்லை என்று பதில் அளித் துள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. கேள்வி நேரத்தின்போது மக்க ளவையில் பி.ஆர். நடராஜன், நாட்டி லுள்ள தனியார் மின் உற்பத்தி நிறு வனங்கள், ஒரு யூனிட் மின்சா ரத்திற்கு, அதிகக் கட்டணம் விதிக்கி றார்கள் என்பதை அரசு அறியுமா என்றும், ஆம் எனில், அதன் விவ ரங்கள் என்ன என்றும், அதிகரிக்கப் பட்ட மின்சார கட்டண வீதம் சம்பந்த மாக, அரசால் ஏதாவது மதிப்பாய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்றும், ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன என்றும், எதிர்காலத்தில், ஏதேனும், மின் தடை இல்லாமலிருக்க, உள் நாட்டில் கிடைக்கும், நிலக்கரியை பயன்படுத்தி, உற்பத்தியை அதி கரிக்க, அரசு எடுத்துள்ள முடிவுகள் என்னென்ன என்றும் கேள்வி எழுப்பி யிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதில ளித்த ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங் அளித்துள்ள பதில் வருமாறு:

மின் உற்பத்தி நிறுவனங்கள், மின்சார விநியோக உரிமதாரர் களுக்கு, மின்சாரச் சட்டத்தின் 62 மற்றும் 63ஆவது பிரிவுகளில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தின்படி மின்சா ரம் அளிக்கின்றன என்றும், எந்த வொரு மின் உற்பத்தி நிறுவனமும் எந்தவொரு அதிகப்படியான கட்ட ணத்தையும் பெற அனுமதி இல்லை என்றும் கூறினார். மேலும், உள்நாட்டு நிலக்கரியை உபயோகப்படுத்துவதன் மூலம், மின் உற்பத்திக்கான செலவை குறைக்கவும், அதன் விளைவாக நுகர்வோருக்கு ஆகும் கட்டணத்தை குறைக்கவும், கீழ்க்கண்டவாறு நட வடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. (i) அதிகப்படியான நிலக்கரி யை, தங்களது திறமையான ஆலை களுக்கு ஒதுக்குதல் மற்றும் போக்கு வரத்து செலவை குறைத்தல் மூலம் மின் உற்பத்திக்கான செலவை குறைக்க மாநில, ஒன்றிய மின் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது உற்பத்தி ஆலைகளுக்கிடையே உள்நாட்டு நிலக்கரியை உப யோகப்படுத்தலில், நெகிழ்வுத் த னமையை அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் பதில ளித்துள்ளார்.

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி வசதிகள்

பி.ஆர்.நடராஜன் மற்றொரு கேள்வியில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மட் டும் தனியாக வங்கி வசதிகள் ஏற் படுத்துவது பற்றி தொழில் அமைப்பு களிடமிருந்து அரசுக்கு ஏதேனும் கோரிக்கைகள் வந்துள்ளதா என்றும் ஆம் எனில், அதன் விவ ரங்கள் என்ன என்றும், அது குறித்து அரசின் நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்து மூலம் பதில ளித்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிசன்ராவ் கராத், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக மட்டும் தனியாக வங்கி வசதிகள் ஏற்படுத்து வது சம்பந்தமாக எந்த ஒரு கோரிக் கையும் அரசுக்கு வரவில்லை என்று பதிலளித்துள்ளார். (ந.நி.)