பிரதமர் மோடி நன்கொடை வசூல் நடத்துகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் “அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி தொழி லதிபர்களிடம் நன்கொடை வசூல் செய்கிறார். அமலாக்கத்துறை வழக்கு பதிந்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை அளித்துள் ளன. மத்தியப்பிரதேச மது ஆலை உரிமை யாளர்கள் ஜாமீனில் வந்தவுடன் பாஜக வுக்கு நன்கொடை தரும் அளவுக்கு வெட்கமின்றி மோடி வசூல் வேலை செய்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.