states

ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி, முதல்வர் மு.கஸ்டாலின் வாக்களித்தனர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தில்லியில் பிரதமர் மோடி வாக்களித்தார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். 
நாட்டின் 15வது குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக  திரௌபதி முா்முவும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இன்று நடைபெறும் குடியரசுத்தலைவர் தேர்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்க உள்ளனா். 
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவினை தொடக்கி வைத்தார். தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். 
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தில்லி செல்ல முடியாத நிலையில், மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 
அதன்படி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நேரடியாக அவர் சென்னை தலைமைச் செயலக வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்களித்துள்ளார். 
தொடர்ந்து, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வருகை தந்திருக்கின்றனர்.  காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
.