states

பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் அவரது தாய்க்கு தெரியும் கார் ஓட்டுநர் வாக்குமூலம்  

பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் அவரது தாய்க்கு தெரியும் கார் ஓட்டுநர் வாக்குமூலம்  

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா வுக்கு எதிரான வழக்கில் அவருடைய குற்றங்கள் குறித்து அவரது தாய் பவானிக்கு தெரியும் என்று அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.  மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புதனன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார் ஓட்டு நர் கார்த்திக் (34) நேரில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும் பெண்க ளை பாலியல் சுரண்டல் செய்தது மட்டு மல்லாமல் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொள்வதை வழக்க மாகவே அவர் கொண்டிருந்தார் என கூறியிருக்கிறார்.  கார்த்திக்கின் வாக்குமூலத்தின்படி ஹஸன் எம்.பி.யாக இருந்த காலக் கட்டத்தில் மட்டும் ரேவண்ணாவின் செல்போனில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பாலியல் காட்சிகள், 40க்கும் மேற்பட்ட வீடியோக்களும் இருந்திருக்கும். இந்த  பழக்க வழக்கம் குறித்து,  பிரஜ்வலின் தாய் பவானியிடம் தானே தெரிவித்ததாகவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்க ளைக் காட்டிய பிறகே அவருக்கு தன் மகன் பற்றிய உண்மை தெரிய வந்தது.  ரேவண்ணாவின் தாயாரே தன்னிடம்அந்த காணொலிகளை அனுப்பும்படி கூறி வாங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் பிரஜ்வல் தன்னுடைய செல் போனை காரிலேயே விட்டுவிட்டு அவரது தோழி ஒருவரது வீட்டுக்கு சென்ற போது அவரது கைபேசியில் இருந்து அனை த்து அந்தரங்க காட்சிகளையும் தனது கைபேசிக்கு மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.