புதுதில்லி, மே 28- பொதுத்துறை நிறு வனமான பாரத் பெட்ரோ லியம் நிறுவனத்தின் பங்கு களை போதுமான அளவு முதலீட்டாளர்கள் வாங்க முன்வராததால் அதனை விற்கும் முடிவு ஒன்றிய அரசால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று அலை மற்றும் ரஷ்ய - உக்ரைன் பிரச் சனை காரணமாக சர்வ தேச அளவில் நிலவும் பண வீக்கம், பதற்றமான சூழ லால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பாதிக்கப் பட்டுள்ளதாக முதலீடு மற் றும் பொது சொத்து மேலா ண்மை துறை தெரிவித் துள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலீட்டாளர் கள் வாங்க முன்வரலாம் என அறிவிப்பு வெளியா னது. ஆனால் 2020-ஆம் ஆண்டு நவம்பர் வரை மூன்று முதலீட்டாளர்கள் மட்டுமே பங்குகளை வாங்க முன்வந்தனர். எரிபொருள் விலை நிர்ணயம் குறித்த தெளி வின்மை போன்ற பிரச் சனகளில் இரண்டு முத லீட்டாளர்கள் “நழுவிக் கொண்டனர்”. ஒரு முத லீட்டாளர் மட்டுமே எஞ்சி யிருந்தார். தற்போது வரையிலும் பெரிய அள வில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், பாரத் பெட்ரோலியத்தின் பங்கு களை தகுதியான முத லீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பதால், அவற்றை விற் கும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.