புதுதில்லி,பிப்.26- அண்டை நாடுகளில் போலியோ நோய் தாக்கம் இருப்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளது. 2022- ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா பிப்ரவரி 26 அன்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்டை நாடுகளில் இன்ன மும் போலியோ நோய்த்தாக்கம் உள்ளது. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டி யது அவசியம். போலியோவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை, பொது சுகா தார திட்டத்தின் வெற்றியாகும். 5 வயதுக் குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். வரும் மாதங்களில் 5 வயதுக்குட் பட்ட 15 கோடிக்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட உள்ளது. எந்த ஒரு குழந்தையும் விடுபடா மல் இருப்பதற்காக வீடு வீடாக சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க முன் வர வேண்டும் என்று நான் பெற்றோர்க ளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்தார். தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று (பிப்.27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்து ணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.