கொச்சி, செப். 2- கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்ட வளர்ச்சி நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய திசையை கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங் களை நெடும்பாசேரி சியால் கன்வென்ஷன் சென்டரில் அவர் தொடங்கி வைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டில் விரிவான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. கேரளாவிலும் நவீன வளர்ச்சியின் கட்டம் தொடங்கியுள்ளது. கொச்சி மெட்ரோவின் இரண்டாம் கட்டம், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் முதல் காக்கநாடு இன்போ பார்க் வரை, இளை ஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொச்சியில் மல்டி மாடல் இணைப்பு அமைப்பு செயல்படுத்தப் படும். இதற்காக ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் கீழ் பல்வேறு போக்குவரத்து அமைப்புகளை ஒருங்கி ணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
நகரின் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதே இதன் நோக்கம். கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக அகற்றுவதே குறிக்கோள். கடந்த 8 ஆண்டுகளாக நகர்ப்புற போக்குவரத்து வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 500 கி.மீ.க்கு மேல் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்திய ரயில்வேயும் விரி வான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டி ருக்கிறது. விமான நிலையங்களுக்கு இணை யான முறையில் ரயில் நிலையங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் ரயில் இணைப்பில் புதிய மைல்கல் உருவாகி வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூ ருக்கு இரட்டைப் பாதை அமைக்கப்படுவதால், சாதாரண பயணிகளுக்கும் புனித பயணம் செய்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்றுமானூர்-சிங்கவனம்-கோட்டயம் ரயில் பாதை இரட்டிப்புப் பணிகள் முடிவடைந்தால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சபரிமலை யாத்ரீகர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும், கொல்லம்-புனலூர் வழித்தடத்தில் மின்மயமாக்கல் நிறைவடைந்தால் மாசுபாட்டைக் குறைத்து வேகமான ரயில்கள் கிடைக்கும்.
போக்குவரத்து அமைப்புகளின் விரிவாக்கத்துடன், சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடையும். கேரளாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக 70,000 கோடி ரூபாய் முத்ரா கடனாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சுற்றுலாத் துறையின் தொழில் முயற்சிகளாகும். கேரளாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை-66 மேம்பாட்டுக்கு 55,000 கோடி செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தை கேரளாவின் உயிர்நாடி என்று அழைக்கலாம் என்று பிரதமர் கூறினார்.
பரிசு வழங்கி கவுரவிப்பு
கொச்சி மெட்ரோ மற்றும் இந்திய ரயில்வேயின் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். கொச்சியில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து காக்கநாடு வரை யிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் அடிக்கல்லை, முதல் கட்டத்தின் பேட்டாவி லிருந்து எஸ்.என். சந்திப்பு வரை மெட்ரோ சேவை யை பிரதமர் தொடங்கி வைத்தார். எர்ணாகுளம் தெற்கு மற்றும் வடக்கு ரயில் நிலையங்கள் மற்றும் கொல்லம் ரயில் நிலையத்தின் புதுப்பிப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். குருபந்தாரா-கோட்டயம்-சிங்கவனம் சாலை இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் மற்றும் கொல்லம்-புனலூர் சாலை மின்மயமாக்கல் ஆகியவை பிரதமரால் நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சிறப்பு ரயிலையும், கொல்லத்தில் இருந்து புனலூர் செல்லும் சிறப்பு ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் பி. ராஜீவ், அந்தோணி ராஜு, ஹைபி ஈடன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்களான கே. பாபு, அன்வர் சதாத், உமா தாமஸ், கொச்சி மேயர் எம். அனில் குமார், கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் லோக்நாத் பெஹ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.