புதுதில்லி, டிச.23- “உலக பத்திரிகைச் சுதந் திர குறியீட்டில் 2021-ல் இந்தியா 142-ஆவது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியிருந்தார். “பத்தி ரிகை சுதந்திரம் என்பதற்கான விளக்கம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், “மோடி அர சால் பறிக்கப்பட்ட சுதந்திரத்தின் பெயர்தான் பத்திரிகை சுதந்தி ரம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், தாக்கூ ருக்குப் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்குர் உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் தர வரிசையை நிராகரித்துள்ளார். பத்திரிகை சுதந்திரம் என்ப தற்கு சரியான விளக்கம் அளிக் காததை அதற்கு காரணமாக கூறியிருக்கிறார். ஆனால், அதற்கான விளக் கம் என்பது எளிமையானது மற் றும் வெளிப்படையானது.
பத்தி ரிக்கைச் சுதந்திரம் என்றால் மோடி அரசால் பறிக்கப்பட்ட சுதந்திரம் என்பதே ஆகும். அதற்கு எடுத்துக்காட்டுகள், ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், கரண் தாப்பர், பரன்ஜாய், பாபி கோஷ், புன்யா பிரசுன் வாஜ் பாய், ரூபின், கிருஷ்ண பிரசாத் என பட்டியல் நீள்கிறது. ‘என்டிடிவி’-க்கு எதிரான அமலாக்கத் துறை வழக்குகள், ‘தைனிக் பாஸ்கர்’ மீது வரு மான வரித்துறை சோதனைகள் ஆகியவையும் அடக்கம். எனவே, அந்த சுதந்திரத்தை திருப்பி யளித்தால், இந்தியாவின் தர வரிசை உயர்வதை நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு ப. சிதம்பரம் கூறி யுள்ளார்.