states

மோடி அரசின் நடவடிக்கையால் கொதிப்பு ஒன்றிய அமைச்சர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் ஆவேச போராட்டம்

புதுதில்லி,பிப்.25-  ஒன்றிய அரசு அலுவலகங்களில் 30  சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலை மையிலான பாஜக அரசு முன்வராத தைக் கண்டித்தும் பணியிடங்களை நிரப்பக் கோரியும் ஒன்றிய  இணை அமைச்சர் ஜிதேந் திர சிங்கின் அலுவலகம் முன்பு பிப்ரவரி 25 வெள்ளியன்று மத்திய  செயலகத் துறை  அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல் ஒன்றிய அரசின் பல் வேறு துறைகளில் போதுமான பணி யாளர்கள் நியமிக்காமல் அலட்சியத்து டன் உள்ளது. ஒன்றிய அரசு கடந்த 6 ஆண்டு களாக மத்திய செயலக சேவை (CSS) அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்காத தால்,  அமைச்சகங்களில் நடுத்தர முதல்  மூத்த நிர்வாக நிலை வரை சுமார்  30 சத வீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பல அதிகாரிகளின் பதவி உயர்வுகளும் பாதிக் கப்பட்டுள்ளது. அவர்கள்  தங்களது பதவி உயர்வு குறித்து துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காலியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணை யம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவது வாடிக்கையாக நடைபெறும்.

ஆனால், மோடி அரசு பதவி ஏற்றது முதல் சீர்திருத்த நடவடிக்கை  என்ற பெய ரில் மேற்கொண்டு வரப்படும் நடவடிக்கை கள் காரணமாக, பதவி உயர்வோ, காலியாக உள்ள இடங்களை நிரப்பவோ முன்வரவில்லை. இதற்கிடையில் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக,  நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதுடன், பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களும் தனி யாருக்கு தாரை வார்க்கப்பட்டு வரு கிறது. இதனால் கோடிக்கணக்கான இளை ஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்ற னர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற மோடியின் வாக்குறு தியை இதுவரை நிறைவேற்றவில்லை.இதனால் இளைஞர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.  மோடி அரசின் நடவடிக்கையால் கோபமடைந்த மத்திய செயலகம் அதிகாரி கள் ஒன்றிணைந்து,  நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 6 ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள பதவி உயர்வு குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.