சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ் எல்வி-சி57 ராக்கெட் மூலம் சனியன்று விண் ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் ஞாயி றன்று ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சுற்றுவட்டப்பாதை உயரம் உயர்த்திய பிறகு தற்போது பூமியில் இருந்து விண்கலம் 245 கி.மீ.x22,459 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது என்றும், செவ்வாயன்று மீண்டும் சுற்று வட்டப்பாதையின் உயரம் உயர்த்தப்பட உள்ளது எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.