திருவனந்தபுரம், மார்ச் 16- ஜனநாயக உரிமைகளை ஜன நாயகப்பூர்வமாக நிலைநாட்டுவ தற்குப் பதில் எதிர்க்கட்சிகள் சட்ட மன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத் துகின்றன என்று சட்ட அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். சட்டமன்ற வளாகம் இதுவரை கண்டிராத, பார்த்திராத முறையில் எதிர்க் கட்சிகள் நடந்துகொள்கின்றன என்றார். இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் பேசிய பி.ராஜீவ், “பிரம்ம புரம் விவகாரத்தில் ஒட்டுமொத்த மாக கேரள மக்களின் உணர்வு களை முதல்வரின் அறிக்கை பிரதி பலிக்கிறது. உயர்நீதிமன்றமும் கேரளத்தின் உணர்வை வெளிப் படுத்தியுள்ளது. பிரம்மபுரம் விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை கேரள மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்து விவாதிப்பதைத் தவிர்க்க இருக்க எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டு தேவையற்ற நடவடிக்கை யில் ஈடுபடுகின்றன. இது அவர்க ளின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலையை அம்பலப்படுத்துகிறது. சட்டமன்ற சபாநாயகரை ‘முது கெலும்பு இல்லாதவர்’ என்று எதிர்க்கட்சிக் தலைவர் கூறுகிறார். ஒரு சபாநாயகரை இவ்வளவு மோசமாக யாரும் விமர்ச்சித் ததில்லை. ஆனால், வீ.டி.சசீதரன் பேசியது கன்னியமற்றது. தலை வர்களின் குடும்பத்தை வம்புக் கிழுக்கிறார்கள். அமைச்சர்களை அவமதிக்கின்றனர். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி யாக செயல்படுவோம் என எதிர்க் கட்சித் தலைவர் பதவியேற்கும் போது கூறினார். அன்றைக்கு அவர் பேசியதையும் இப்போது அவர் நடந்துகொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் தாம் சொன்னதை மறந்து செயல் படுகிறார்” என்றார்.