திருவனந்தபுரம், மார்ச் 15- இரண்டாவது பினராயி அரசின் இரண்டா வது பட்ஜெட்டை பொதுமக்கள் வரவேற்ற னர். பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதி யினரும் இம்முறை அமைதியாக இருந்த னர். எல்டிஎப் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்களை கடுமையாக எதிர்ப்பதை வழக்க மாக கொண்ட ஒரு பகுதி ஊடகங்களும் இம்முறை பின்வாங்கின. வரவு-செலவுத்திட்டத்திற்கு பொதுவாக கிடைத்துள்ள வரவேற்பை ஏற்றுக்கொண்ட தை உணர்ந்து, சில ஊடகங்கள் தோட்டத் துறையில் மாற்றங்களுக்கான பட்ஜெட் முன் மொழிவுகளில் சர்ச்சையை ஏற்படுத்த முயற்சித்தன, ஆனால் அது எடுபடவில்லை. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தோட்டப் பயிர் வகைக்குள் பழங்களை உள்ள டக்கும் சட்டத் திருத்தத்தின் அவசியத்தை நிதி யமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் பகுதி யை மாற்றுவதன் மூலம், பெருந்தோட்டச் சட்ட த்தில் பெரிய திருத்தம் என ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரம் சூடுபிடிக்கவில்லை. பெரும்பாலும் வணிக சமூகத்தினரிடம் இருந்து பட்ஜெட்டுக்கு வரும் எந்த எதிர்ப்பும் இம்முறை வரவில்லை,
அனைத்து பொருளாதார நிபுணர்களும் பட்ஜெட்டை வர வேற்றுள்ளனர். பொருளாதார - சேவை - வெகுஜன அமைப்புகளும் பட்ஜெட்டை வர வேற்றன. தங்களை கலந்தாலோசிக்க வில்லை என்று யாரும் புகார் கூறவில்லை. நடைமுறைக்கு மாறான வரவு செலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைத் தாண்டி எதிர்தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. நிலத்தின் நியாய மான மதிப்பில் முன்மொழியப்பட்ட சிறிய அதி கரிப்பு முற்றிலும் நியாயமானது என்பதே பொதுவான மதிப்பீடு. வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் விலையுடன் ஒப்பிடுகையில் நியாயமான விலை சந்தை விலையில் பாதிக்கும் குறை வாக உள்ளது. சந்தை விலை உயர்வால் கேரளாவில் நிலம் அதிக லாபம் தரும் பொருளாக மாறியுள்ளது. இந்த ஆதாயத்தில் ஒரு சிறு பகுதியையாவது அரசின் வளத் திரட்டலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பொருளாதாரத் துறையின் பொதுவான கருத்து. அதன் பகுதியாக நடந்துள்ள சிறிய தொடக்கமும் அனைவராலும் ஏற்கப்பட்டது என்பது பதில்களில் இருந்து தெளிவாகிறது.