states

img

ஆதித்யநாத்தின் 52 அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம்!

லக்னோ, மார்ச் 26- உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறை யாக, வெள்ளியன்று பதவியேற்றுக் கொண்டார். லக்னோவில் உள்ள அடல் பிகாரி  வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா வில், ஆளுநர் அனந்தி பென் படேல், ஆதித்யநாத்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆதித்யநாத்துடன் இரண்டு துணை முதல்வர்கள், 16 கேபினட் அமைச்சர்கள், 14 இணை அமைச்சர் கள் (தனிப் பொறுப்பு) மற்றும் 20  அமைச்சர்கள் என மொத்தம் 52  அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், ஆதித்யநாத்தின் முந்தைய அமைச்சரவையைப் போன்று, இப்போதும் ஒரே ஒரு முஸ்லிமிற்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப் பட்டு உள்ளது.  கடந்தமுறை இருந்த மொஹ்சின் ராசாவுக்குப் பதிலாக 32 வயதான முக மது டேனிஷ் ஆசாத் அமைச்சராக்கப் பட்டு உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில், முஸ்லிம்கள் 20 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக் கது. '

இதேபோல பெண்களிலும் வெறும் 5 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பேபி ராணி மவுரியா கேபினட் அந்தஸ்து  பெற்ற அமைச்சராகவும், குலாப் தேவி இணை அமைச்சராகவும் பிரதிபா சுக்லா, ரஜினி திவாரி மற்றும் விஜய லட்சுமி கௌதம் ஆகியோர் அமைச் சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். அதேநேரம், உ.பி. மக்கள் தொகை யில் தலா 10 சதவிகிதம் என மொத்தம்  20 சதவிதமாக உள்ள பிராமணர்கள் மற்றும் தாக்குர் உள்ளிட்ட உயர்பிரிவி னருக்கு தலா 7 என்ற எண்ணிக்கை யில் மொத்தம் 14 அமைச்சர்கள் பதவி கள் வழங்கப்பட்டுள்ளன.  2 துணை முதல்வர் பதவிகளிலும் ஓரிடம் பிராமணருக்கு வழங்கப்பட் டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியிலி ருந்து வந்த பிராமண முகமான பிர ஜேஷ் பதக் துணை முதல்வர் ஆக்கப் பட்டுள்ளார். இவர் தவிர, தேர்தலில் தோற்றுப்போன கேசவ் பிரசாத் மவு ரியாவுக்கு (ஓபிசி) மறுபடியும் துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது.

40 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் யாதவ் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 19 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதுபோலவே 20 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பிரிவில், பேபி ராணி மவுரியா (கேபினட் அமைச்சர்) அசிம் அருண், குலாபோ தேவி (இணை அமைச்சர்கள்) தினேஷ் காடிக், மனோ கர் லால் கோரி, சுரேஷ் ராஹி, அனுப் வால்மீகி மற்றும் விஜய் லக்ஷ்மி கௌதம் (அமைச்சர்கள்) என மொத் தம் 8 பேருக்கு மட்டுமே அமைச்சரவை யில் இடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியும், பிரதமர் மோடியின் நம் பிக்கைக்கு உரிய நபருமான அரவிந்த் குமார் சர்மா, கடந்த ஆண்டு காங்கிர சில் இருந்து விலகி பாஜக-வில் சேர்ந்த ஜிதின் பிரசாதா, மசூதி இடிப்பின் போது, உ.பி.யில் முதல்வராக இருந்த  பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங்கின் பேரன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.