புதுதில்லி,ஏப்.15- பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங் காட்சியகத்தை பிரதமர் மோடி தில்லியில் திறந்து வைத்தார். தில்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முன்னாள் இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில்உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பிரதமர்கள் பயன்படுத்திய பொருட்கள், எழுதிய அரிய கடிதங்கள் போன்ற வைகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியப் பிரதமர்களாக பதவி வகித்த 14 பேர் பற்றிய குறிப்புகள் இந்த அருங் காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். இளைஞர்கள் முடிந்தவரை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.