states

ஒமைக்ரான் பாதிப்பு 1,500-ஐ தாண்டியது

புதுதில்லி, ஜன.2- நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 460 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும் ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமைக்ரான்  வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் குணமடைந்துவிட்டனர். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 560 பேர் குணமடைந்துவிட்டனர். இந்தியா வில் கொரோனாவின் டெல்டா வைரஸின் பரவல் குறைந்து ஒமைக்ரான் வரைஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கையின் அளவிலும் ஒமைக்ரான் வைரஸ் அதிகரித்து வருகிறது, வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனாவால் பாதி்க்கப்படுவோரில் 80 சதவீதம்பேர் ஒமைக்ரான் பாதிப்போடு இருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.