பெங்களூரு, ஜூன் 24- பிற கட்சிகள் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாத பாஜக, நாட்டில் கேவலமான அரசியலை செய்து வரு வதாகவும், நாட்டில் அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய் விட்டதாகவும் எச்.டி. குமாரசாமி தெரி வித்துள்ளார். பெங்களூருவில் உள்ள மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலை மையகமான ஜே.பி. பவனில், அக்கட்சி யின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது: ‘ஆபரேசன் தாமரை’ என்ற திட்டத்தை பாஜக-வை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கொண்டு வந்தார். இந்த ஆபரேசன் தாமரை திட்டத்தின் கீழ் மாநில அரசைக் கவிழ்த்து பாஜக ஆட்சி அமைக்க எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி னார்கள். பாஜக-வின் அதிகார தாகம் மிகவும் மோசமான நிலையில் இருக் கிறது. இனி வரக்கூடிய நாட்களில் எந்த அரசும் பாஜகவின் அதிகார தாகத்துக்கு முன்னாள் நிற்க முடியாது. பெரும்பான் மையாக வெற்றிபெற்ற கட்சிகளைக் கூட ஆட்சியமைக்க பாஜக அனுமதிக் காது.
தற்போது மகாராஷ்டிராவில் சிவ சேனா எம்எல்ஏ-க்கள் ஆளும் சிவசேனா அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறுவதாக பாஜக சொல்கிறது. மகாராஷ்டிரா அரசி யல் குழப்பத்தை வைத்து ஒருதரப்பு கேவலமான அரசியலை செய்து வரு கிறது என்றால் அது வேறு யாருமல்ல பாஜக கட்சிதான். அதில் எந்தவித மான சந்தேகமும் எனக்கு கிடையாது. கர்நாடகத்தில் நானும் இதை அனுபவப் பட்டு இருக்கிறேன். கர்நாடகாவில் நான் முதலமைச்சராக இருந்தபோது எம்எல்ஏ-க்களை நம்பவில்லை என்று பாஜக குற்றம்சாட்டியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக நடத்தப்பட வில்லை என்ற பொய் பிரச்சாரத்தை அவர்கள் கையில் எடுத்தனர். நான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதி களின் வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே ரூ. 19 ஆயிரம் கோடியை ஒதுக்கினேன். அந்த பட்டியலையும் கட்சியின் சட்டமன்றத் தலைவரிடம் வழங்கினேன். எப்படியோ ஒரு வழி யாக பாஜக அரசியல் செய்து ஆப ரேசன் தாமரையை நடத்தி எனது அரசைக் கலைத்து விட்டது. இன்று மகாராஷ்டிராவில் பாஜக-வின் செயல்பாடுகள் அரசியல் சாசனத் துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. நாடு முழுவ தும் அவதூறுகளை அக்கட்சி பரப்பி வருகிறது. இந்தியாவில் இன்று அரசிய லமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லா மல் போய்விட்டது. இவ்வாறு எச்.டி. குமாரசாமி குறிப்பிட் டுள்ளார்.