புதுதில்லி,டிச.28- கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அனைத்து வகை யான பாடத்திட்டங்களை குறைக்க திட்ட மிட்டுள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் சுமார் 40 சதவிகிதம் அளவிலான பாடத்திட்டங்களை குறைத்துக்கொள்ள என்சிஆர்டி ஏற்கெனவே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது பாடப்புத்தங்க ளில் உள்ளடகத்தை குறைக்க திட்ட மிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கான தேசிய கவுன்சில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும், மாணவர்களின் கல்விச் சுமையை 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டு வருவதுடன் பாடப்புத்தங்களில் உள்ள டகத்தை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ள தாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.