ஸ்ரீநகர், மார்ச் 25 - வாக்கு அரசியலுக்கான வியாபா ரத் தந்திரமாகவே கடவுள் ராமரை சிலர் பயன்படுத்துவதாகவும், வெறுப்பைப் பரப்பும் அந்த முட்டாள்களை இந்தியர் கள் அனைவரும் புறக்கணிக்க வேண் டும் என்றும், காஷ்மீர் முன்னாள் முதல் வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலை வருமான பரூக் அப்துல்லா வேண்டு கோள் விடுத்துள்ளார். உதம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது, இதுதொடர்பாக, பரூக் அப்துல்லா மேலும் பேசியிருப்பதாவது: ராமர் இந்துக்களின் கடவுள் மட்டு மல்ல. மத வேறுபாடின்றி அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவ ருக்குமே ராமர் கடவுள்தான். பாஜக, தான் ஆட்சியில் இருப்பதற்காக மட்டுமே ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது. ராமர் இந்துக்களின் கடவுள் மட்டு மல்ல. இந்த எண்ணம் உங்கள் (மக்க ளின்) மனத்தில் இருந்தால் இந்த எண்ணத்தை அகற்றிவிட வேண்டும். முஸ்லிமாக இருந்தாலும் சரி, கிறிஸ்த வராக இருந்தாலும் சரி, அமெரிக்க ராக இருந்தாலும் அல்லது ரஷ்யராக இருந்தாலும் சரி, நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ராமர் கடவுள்தான். நாங்கள் மட்டுமே ராமரின் சீடர்கள் என்று கூறுபவர்கள் அனைவருமே முட்டாள்கள்தான். இவர்கள் ராமரின் பெயரில் வெறுப் பை விற்க விரும்புகிறார்கள். இவர்களு க்கு ராமர் மீது உண்மையான அன்பு இல்லை, அதிகாரம் மட்டுமே தேவையாக இருக்கிறது. வேண்டுமென்றால் பாருங் கள்... காஷ்மீரில் தேர்தல் அறிவிக்கப் படும்போது, சாதாரண மக்களின் கவ னத்தைத் திசை திருப்ப ராமர் கோயி லைத் திறப்பார்கள். மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பு பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்.” இவ்வாறு பரூக் அப்துல்லா பேசி யுள்ளார்.