லக்னோ, ஜூன் 11- நூபுர் சர்மாவை கைது செய்யக் கோாி போராட்டம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றது. போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியதாகக் கூறி காவல்துறையினர் 136 பேரை கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச் சையை உருவாக்கி உள்ளது. இந்நிலை யில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகா ரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட் டங்கள் நடைபெற்றன. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பிரசாந்த் குமார் கூறுகை யில், சஹரன்பூரில் 45 பேர், பிரயாக்ரா ஜில் 37 பேர், அம்பேத்கர் நகரில் 23 பேர், ஹத்ராஸில் 20 போ்,மொராதாபாத்தில் 7 பேர், பிரோசாபாத் மாவட்டத்தில் இருந்து 4 பேர் என மொத்தம் 136 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றார்.
உத்தர்கண்ட்
உத்தர்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தில் காவல்துறை யினர் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் படுகாய மடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்த தாக இராஜேந்திரா மருத்துவ அறி வியல் கழக அதிகாரிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர்.
மேற்குவங்கம்
மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட் டத்தில் பஞ்சால் மற்றும் டோம்ஜூர் பகுதிகளில் முஸ்லிம்கள் போராட் டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதையடுத்து ஹவுரா மாவட்டத்தில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, ஜூன் 13- ஆம் தேதி காலை 6 மணி வரை இணைய தள சேவைகள் நிறுத்தப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. பஞ்சால் மற்றும் ஜகத்பல்லவ்பூர் ஆகிய ஊர்களில் ஜூன் 15- ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஹவுரா வில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக் கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சில அரசியல் கட்சிகள், கலவரத்தை ஏற் படுத்த முயல்கின்றன. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பா.ஜ.க. செய்த பாவத்தால் சாமானியர்கள் பாதிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஹவுரா மாவட்டத்தில் பதற்றம் நில வும் பகுதிகளுக்குச் சென்ற பல மூத்த பாஜக தலைவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். மேற்கு வங்க மாநில பாஜக தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான சுகந்தா மஜும் தார் கொல்கத்தாவின் வடக்குப் புறநக ரில் உள்ள நியூ டவுனில் உள்ள அவரது இல்லத்தில் சிறைவைக்கப்பட்டார். கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும் இரண்டாவது ஹூக்ளி பாலத்தில் பாஜக தலைவரும் வழக்கறி ஞருமான பிரியங்கா திபர்வாலின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில, பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சௌமித்ரா கான், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநி லத்தில் பதற்றம் நிலவும் பகுதிகளில் மத்திய ஆயுதப் படைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் உள்ள பல இமாம்கள் மக்கள் போராட் டத்தைக் கைவிட்டு அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். (பிடிஐ)