பசுவை கடத்தியதாக முஸ்லிம் இளைஞர் என்கவுண்டர்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே கல்காலியன் ஆற்றின் கரை யில் வெள்ளிக் கிழமை அதிகாலை முஸ்லிம் இளைஞர் ஒருவரை, அம்மாநில காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் முகமது வாசிம் படுகாயத்துடன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் முகமது வாசிம் எதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகவில்லை. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று மாலையில் முகமது வாசிம் பசு கடத்தல்காரர் என்றும், 50 பசுக்களை கடத்தியதாகவும், கைது செய்யும் முன் தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளன. முஸ்லிம் மக்களை குறி வைத்து உத்தரப்பிரதேச காவல்துறை மேற்கொள்ளும் இந்த அடாவடி சம்ப வத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்து வருகின்றன.