states

img

ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக உடன்பாடு இந்திய விவசாயத்தை மேலும் அழிக்கும் மோடி அரசு

ஐரோப்பாவின் நான்கு பெரும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய தாராள வர்த்தக சங்கத்துடன் மிகவும்  ரகசியமான முறையில் ஒன்றிய பாஜக அரசு, தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத் திட்டுள்ளது.  இது இந்திய விவசாயத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது. இதர பல்வேறு தொழில்கள் மீதும் இந்த உடன்பாடு கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 நாடுகளுடன் உடன்பாடு ஐரோப்பிய நாடுகளான  ஐஸ்லாந்து, லீச்சென்ஸ்டியன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளுடனான தாராள வர்த்தக உடன்பாட்டில் முதற்கட்டமாக இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த உடன்பாட்டின் இலக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த நாடுகளின் நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகள் செய்யும் என்றும் அதன் மூலமாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் மோடி அரசு இத்தகைய வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ரகசியமான முறையில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தி மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகத்துடன் இத்தகையதொரு தாராள வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது உடன்பாடாக மேற்கண்ட நான்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய தாராள வர்த்தக சங்கத்துடன் உடன்பாடு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தாராள இறக்குமதி

இந்த உடன்பாட்டின் அடிப்படையில், இந்திய சந்தைக்குள் மேற்கண்ட நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உற் பத்திப் பொருட்களும் மிக தாராளமாக இறக்குமதி செய்யப்படலாம்; அதற்கான இறக்குமதி வரி உள் ளிட்ட கட்டணங்கள் கணிசமான அளவு குறைக்கப்படும்; இறக்குமதிக்கான  சுங்க நடைமுறை விதிகளும் மிகவும்  எளிதாக்கப்படும் என்று இந்திய அரசியல் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

பேரழிவைத் தரும்

இந்த தாராள வர்த்தக உடன்பாடு தங்களது  அரசின் மாபெரும் சாதனை என்று ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறி யுள்ளார். ஆனால் இந்த உடன்பாடு இந்திய விவசாயத்திற்கும் இதர பல்வேறு சிறு, குறு தொழில்களுக்கும் பேரழிவையே தேடித்தரும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதவெறி அரசியலை ஒருபுறம் தீவிரமாக அமலாக்கிக் கொண்டே மற்றொரு புறம் நவீன தாராளமயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக அமலாக்கி வரும் மோடி அரசு, பன்னாட்டு  மற்றும் உள்நாட்டு பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களையும் பெரும் முதலாளிகளை யும் குஷிப்படுத்தும் நடவடிக்கைகளை இடை விடாது மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியே, இந்திய விவசாயம் மற்றும் சிறு- குறு தொழில்களை அழிக்கும் விதமாக மேற்  கொள்ளப்பட்டு வரும் தாராள வர்த்தக உடன்பாடுகள். இந்த உடன்பாடுகளை முந்தைய காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் செயலாக்க முயன்ற போது மிகப்பெரும் கண்டனம் எழுந்தது. நாடு தழுவிய போராட்டங் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களும் வலுவாக நடத்தின.  ரகசியமாக பேசிய மோடி அரசு இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான பாஜக அரசு ரகசியமான முறையில் தாராள வர்த்தக உடன்பாடுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பாக மாநில அரசுகளுடனோ, நாடாளுமன்றத்திலோ எவ்வித ஆலோசனையும், விவாதமும் நடத்தவில்லை. இந்திய தொழில்கள் அனைத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சனையில் எவ்வித வெளிப் படைத் தன்மையையும் மோடி அரசு பின்பற்ற வில்லை என அகில இந்திய விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

எல்லாப் பொருளும் வரும்

தற்போது ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, ஐஸ்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளிலிருந்து பதப்படுத்தப்பட்ட மீன் உணவு தாராளமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் என இறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உயர் ரக வேதிப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், இயந்திர உப பொருட்கள்,  பால் உற்பத்திப் பொருட்கள், தயிர்,  நெய் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், குளிர்பானங்கள், சாக்லேட்டுகள் உள்பட உணவுப் பொருட்கள் முதல் கனரக இயந்தி ரங்கள் வரை தாராளமாக இந்தியாவிற்குள் சந்தைப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தப் பொருட்களை இந்தியாவிற் குள் கொண்டுவர வரி விகிதங்களை பெருமளவு குறைப்பது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தும் நார்வேயும் மீன் உணவு உற்பத்தியில் உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தி யாளர்களாக இருக்கும் நிலையில் இந்தியா வுடனான தாராள வர்த்தக உடன்பாடு, இந்திய மீனவர்கள் மற்றும் மீன் பிடித் தொழிலா ளர்களின் வாழ்வில் மிகக்கடுமையான தாக்குதலாக மாறும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுவரை இல்லாத பாதகம்

ஏற்கெனவே மோடி அரசு விவசாயம், பால் உற்பத்தி மற்றும் மீன் வளம் ஆகிய துறைகளுக்கான மானியங்களை பெருமளவு வெட்டி, இத்துறைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களை கடும் துயரில் தள்ளியுள்ளது. இந்தப் பின்னணியில் நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பெரும் கார்ப்பரேட்டுகள் இந்திய மீன் சந்தையில் மிகப்பெரும் அளவு முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அதேபோல, சுவிட்சர்லாந்திலிருந்து பதப் படுத்தப்பட்ட உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள், காபி மற்றும் பல்வேறு வகை யான குளிர்பானங்கள், இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும் அபாயமும் மேற்கண்ட தாராள வர்த்தக உடன்பாட்டால் எழுந்துள்ளது. இதுவும் இந்திய விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்.  கார்ப்பரேட்களுக்கே உதவும் இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு ஐரோப்பிய நாடு களில் சந்தை உருவாக்கித் தரப்பட வாய்ப்பு  கிடைக்கும் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறு கிறார்கள்; ஆனால் அது சாதாரண விவசாயி களுக்கு பலன் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் நெஸ்லே, ஆஸ்ட்வால் சீ புட்  மற்றும் லிராய் போன்ற மிகப்பெரும் விவசாய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் உதவும்;  இந்த நிறுவனங்கள்தான் இந்திய அரிசியை ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்து வரு கின்றன என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் மிகப்பெரிய கார்ப்பரேட் மருந்து உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய மருத்துவ சந்தையை கைப்பற்றுவதற்கு இந்த உடன்பாடு வழி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்திய மருந்துகளுக்கான அறிவுசார் காப்புரிமையை காவுகொடுப்பதற்கும் இந்த உடன்பாடு வழி செய்துள்ளது என்றும் விவசாயிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

3 கோடிப் பேர் எங்கே? 
6 ஆயிரம் பேர் எங்கே?

இந்த உடன்பாடு இந்திய மக்களின் வாழ்விய லில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் டாக்டர் விஜு கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், இந்தியா  போன்ற பல கோடிக்கணக்கான உழைப்பாளி கள், விவசாயிகள் கொண்ட நாட்டிற்கும் சில ஆயிரம் விவசாயிகள், மீனவர்களையே கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் தாராள வர்த்தகம் என ஒப்பந்தம் மேற் கொள்வது முற்றிலும் தவறு; முற்றிலும் அறி வியல்பூர்வமற்றது என்று விமர்சித்துள்ளனர். “ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விவசாயம், பால் உற்பத்தி, மீன்வளம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் முரண்பாடு உள்ளது. ஐரோப்பிய தாராள வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த மேற்கண்ட நாடுகளில் அதிக பட்சம் 6 ஆயிரம் மீனவர்கள்தான் அந்தப் பணி யில் ஈடுபட்டுள்ளனர். மாறாக இந்தியாவில் உள்நாட்டு மீனவர்கள் மட்டுமே 3 கோடிக்கும் அதிகமானோர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் சிறு, குறு உற்பத்தியாளர்களே ஆவர்.இந்தியா வில் 2023 கணக்கின்படி தனிநபர் வருமானம் சுமார் ரூ.2லட்சம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதற்கு நேர்  மாறாக தனிநபர் வருமானம் என்பது ரூ.50 லட்சம் முதல் 58 லட்சம் வரை உள்ளது. மிகக்குறைந்த வருமானம் கொண்ட இந்திய விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஐரோப்பிய நாடுகளின் கார்ப்பரேட் கம்பெனி களிடம் அடகு வைக்கிறது மோடி அரசு. அதேநேரத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் தங்களது விவசாயிகளை, மீனவர்களை இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மேலும் வருமானம் பெறுபவர்களாக மாற்றுகின்றன” என்று கூறி யுள்ளனர்.