புதுதில்லி, மே 7- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங் கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், மல்யுத்த முன்னணி வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், கீதா போகத், மல் யுத்த வீரர் பஜ்ரங் புனியா உடன் இணை ந்து தில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் குதித்தனர். அதன் பின்பு இந்திய முன்னணி குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் தலை மையில் விசாரணை ஆணையம் அமைத்ததால் நீதி கிடைக்கும் என நம்பிக்கையுடன் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம், சொந்த கட்சி எம்.பி., என்பதாலும் மாநில தேர்தலை மனதில் கொண்டும் பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது.
இதனால் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் மீண்டும் தில்லியில் போராட்டத்தில் குதித்தனர். பிரிஜ் பூஷன் மீது எப்ஐஆர் பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் குழு கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்த நிலையில், தில்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளில் (ஒன்று போக்சோ) வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், பிரிஜ் பூஷனிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. போக்சோ வழக்குப்பதிவு செய்யப் பட்ட நிலையில் அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை. இதனால் பிரிஜ் பூஷன் பதவியிலிருந்து வில கும் வரையிலும், சிறையில் அடைக் கும் வரையிலும் போராட்டத்தை கை விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். கடந்த புதனன்று மழைக்காலத்தை சமாளிப்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்காக படுக்கை கட்டில்களை ஏற்பாடு செய்தார். அனுமதியின்றி போராட்டக் களத்துக்கு வந்ததாக சோம்நாத் பாரதி யை கைது செய்து, மடிக்கும் வகையி லான படுக்கை கட்டில்களை போலீசார் பறிக்க முயன்ற பொழுது மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தி யவர்கள் சீருடை அணியாத போலீசார் எனவும், அவர்கள் அனைவரும் மது அருந்தி தாக்குதல் நடத்தியதாகவும் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீருடன் குற்றச்சாட்டினர்.
சொல்லிக் காட்டும் மோடி அரசு
இந்நிலையில், மல்யுத்த வீராங் கனைகளின் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் களமிறங்கி யுள்ள மோடி அரசு, மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் மற்றும் மல்யுத்த போட்டிகளுக்கு செலவழித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் மல்யுத்த போட்டிகளுக்கு அரசு ரூ.150 கோடி செலவிட்டு உள்ளது. நிபுணர் களின் வழிகாட்டுதலின் பேரில் வெளி நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பிய வகையில் ரூ.63 கோடியும், ரூ.2.5 கோடி செலவில் நவீன தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள், சிறப்பு பயிற்சி ஆகியவை மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. நிபுணர்களுக்கு அலவன்ஸ் தொகையாக ரூ.15 கோடியும், உள்ளூர் பயிற்சிக்காக ரூ.35 கோடியும், தேசிய அளவிலான பயிற்சிக்காக ரூ.25 கோடியும், சிறப்பு ஆதரவு வகையில் ரூ.7 கோடியும் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ரூ.2 கோடியும், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோரின் தனிப்பட்ட செலவுகளுக்காக முறையே ரூ.2.16 கோடி மற்றும் ரூ.2.58 கோடி செலவிடப்பட்டு உள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் - வீராங்கனைகளின் போராட்டம் நடைபெறும் நிலையில், ஒன்றிய அரசு சிறுபிள்ளைத்தனமாக நாட்டிற்காக விளையாடிய மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்கு செலவு செய்ததை சொல்லிக் காட்டும் விதம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போராட்டக் களத்தில் மாதர் சங்கம்
மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம் நடைபெறும் தில்லி ஜந்தர் மந்தர் களத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரில் சென்று ஆதரவு வழங்கினர். மாதர் சங்கத்தினருடன் இந்திய பெண்களின் தேசிய கூட்டமைப்பும் சென்று மல்யுத்த வீரர் - வீராங்கனைகளுக்கு ஆதரவு அளித்தனர்.