புதுதில்லி, ஜூன் 24 - அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கை, மோடி அரசு சத்தமில்லாமல் அதி கரித்துள்ள நிலையில், இதுதான் ஆரோக்கி யமான பொருளாதாரமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்ச ருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி யுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் துவங்க உள்ள புதிய நிதியாண்டில் நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று பட்ஜெட்டின் போது கணித்து அறிவித்து இருந்தது. இதைத் தற்போது 6.7 சதவிகிதம் என உயர்த்தியுள்ளது. இந்நிலையில், ப. சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக் களைப் பதிவிட்டுள்ளார். அதில் ஒன்றில், “அரசு சில மாதத்தி லேயே 2022-23 நிதியாண்டிற்கான தனது 6.4 சதவிகித நிதிப் பற்றாக்குறை இலக்கை மாற்றியுள்ளது. தற்போது அரசு 2021-22 நிதியாண்டின் 6.7 சதவிகிதத்தை நிலை நிறுத்த முயற்சி செய்வதாக அறிவித்துள் ளது” என்று குறிப்பிட்டு, “அதிகப்படி யான நிதிப் பற்றாக்குறை அளவீடு, அதி கப்படியான பணவீக்கம், அதிகப்படியான அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், அந்நிய செலாவணி இருப்பில் சரிவு ஆகியவை இந்தியாவில் இருப்பதால், நிதிப் பற்றாக் குறைக்கு அரசு எதைக் கைகாட்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மோசமாக உள்ளதா? என்று கேட்கும் தொனியில், “இந்தியப் பொருளா தாரம் பிங்க் ஆப் ஹெல்த் (pink of health) நிலையில் உள்ளதா?” என கேட்டுள்ள அவர், “வலிமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்குவதில் குறைவான அதிகாரம் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரம் என்னும் சக்கரம் சிறப்பாக இயங்காது” என தெரிவித்துள்ளார்.